தன்னை தானே கத்தியால் குத்தி முதியவர் தற்கொலை முயற்சி

தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டு முதியவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-29 21:08 GMT
பழனி அருகே சொத்து தகராறில் தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டு முதியவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி அருகே வத்தகவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவர் தனது விவசாய நிலத்தை விற்க முற்பட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது கடைசி மகன் தடையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்லமுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கத்தியால் தனது வயிற்றில் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். செல்லமுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்ததை பார்த்த அவரது மனைவி அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்