மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் இருந்து விழுந்த "டைல்ஸ் கல்"

சென்னை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் இருந்து டைல்ஸ் உடைந்து விழுந்த‌தில் பெண் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-09-29 07:54 GMT
சென்னை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் இருந்து டைல்ஸ் உடைந்து விழுந்த‌தில் பெண் படுகாயம் அடைந்தார். விஜயா என்பவர் தனது கைக்குழந்தையுடன் ரயிலில் இருந்து இறங்கியபோது, மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ், ரயில் அதிர்வு காரணமாக உடைந்து விழுந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த விஜயா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்