சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பரபரப்பு

வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் பையை சோதனை செய்தனர்.

Update: 2018-09-23 21:17 GMT
சென்னை விமானநிலையத்தில் இரண்டாவது நுழைவு வாயில் அருகே இருந்த , ஒரு பையின் அருகே யாரும் வராதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டன. தகவலறிந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் பையை சோதனை செய்தனர். அப்போது, அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. துணிகளும், சாக்லேட்டுகளும் இருந்த அந்த பையை பயணிகள் யாராவது தவறவிட்டிருக்கலாம் என்பதால், விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்