"கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய தேர்வு" - அமைச்சர் அன்பழகன்

கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-18 12:28 GMT
கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மகளிர் கல்லூரி விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து பல்கலை கழகங்களிலும் ஒரே சீரான தேர்வு நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படும் எனவும் கலை கல்லூரிகளுக்கும் ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு அமல் படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும், விடைத்தாள் மோசடி வழக்கில் ஈடுபட்டவர்கள் மீது குற்றம் நிரூபணமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்