ஜே.சி.பி. மீது ரயில் மோதி விபத்து : 'ஹெட்போனில்' பாட்டு கேட்டு வந்ததால் விபரீதம்

ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டு ரயில் வருவதைக் கவனிக்காமல் சென்ற ஜே.சி.பி. ஓட்டுநரால் விபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2018-09-10 11:12 GMT
ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டு, ரயில் வருவதைக் கவனிக்காமல் சென்ற ஜே.சி.பி. ஓட்டுநரால் விபத்து ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து, மதுரை சென்ற அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில், பழனி அருகே வந்தபோது, ஜே.சி.பி. வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் ஜே.சி.பி. தலைகுப்புற கவிழ்ந்ததால், 2 பேர் காயமடைந்தனர். ஆளில்லா ரயில்வே கேட்டை, அஜாக்கிரதையாக ஜேசிபி வாகனம் கடந்து சென்றது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்