மதுரை கால்வாய் பகுதியில் சடலமாக கிடந்த இளைஞர்...

மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே இளைஞரை வெட்டி கொன்ற மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Update: 2018-09-10 10:52 GMT
மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே இளைஞரை வெட்டி கொன்ற மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். பெரியாற்று கால்வாய் பகுதியில் இளைஞர் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



உடனே தடயவியல் நிபுணர்களுடன் வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவரின் பெயர் குமார் என்பது தெரிய வந்துள்ளது. குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்