வழக்கம் போல் இயங்கும் தமிழக பள்ளி,கல்லூரிகள்...

முழு அடைப்பு வேலைநிறுத்த போராட்டத்தால், தமிழக பள்ளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அவை வழக்கம் போல் இயங்கி வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-09-10 04:34 GMT
மாநிலம் முழுவதும் இன்று 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் உள்ளிட்ட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கவில்லை என, தமிழ்நாடு பிரைமரி மெட்ரிகுலேஷன் பள்ளி பொது செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளுக்காக இயக்கப்படும் பள்ளி வேன் மற்றும் பேருந்துகள் இன்று காலை வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதே போல் அரசுப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், பள்ளிக்கு வந்துள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போல் தமிழகத்தில் கல்லூரிகளும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இயங்கி வருகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்