ரயில் பயணிப்போர் நலசங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்...

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பு, ரயில் பயணிப்போர் நலசங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-09-09 10:43 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பு, ரயில் பயணிப்போர் நலசங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  செங்கோட்டை- சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க வேண்டும் என்றும், தாம்பரத்தில் இருந்து அருப்புகோட்டை வழியாக செங்கோட்டைக்கு தினசரி ரயிலும், மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய வழித்தடத்தில் ரயிலும் இயக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதேபோல கொல்லத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அருப்புகோட்டை வழியாக புதிய ரயில் இயக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்