தேக்கு மரம் வெட்டி கடத்தல் : புதுச்சேரி தொழிலதிபர் கைது
தேக்கு மரம் வெட்டி கடத்தியதாகக் கூறி, புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேக்கு மரம் வெட்டி கடத்தியதாகக் கூறி, புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் சரணாலயத்தில் தேக்கு மரம் வெட்டி கடத்தியதாக வன ஊழியர் முருகன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், கடத்தப்பட்ட தேக்கு மரங்களை புதுச்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, கார்த்திகேயனிடம் இருந்து 70 தேக்கு மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் , அவரை சிறையில் அடைத்தனர்.