விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிப்பில் வடமாநில தொழிலாளர்கள்
ஒசூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வட மாநில தொழிலாளர்கள் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒசூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வட மாநில தொழிலாளர்கள் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் தங்கியிருக்கும் இவர்கள் பல வண்ணங்களில் ஒரு அடி முதல் 25 அடி வரை உள்ள விநாயகர் சிலைகளை வடிவமைக்கின்றனர். விநாயகர் சிலை தயாரிப்பு தொடர்ந்து, கொலு பொம்மைகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அவர்கள், இம்முறை அதிக அளவில் சிலை விற்பனையாகும் என்று நம்பிக்கையில் உள்ளனர்.