யார் இந்த புல்லட் நாகராஜ் ?

சிறை உயர் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜ் யார் என்பதை தற்போது பார்க்கலாம்

Update: 2018-09-07 08:45 GMT
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த புல்லட் நாகராஜ் மீது ஆறு கொலை வழக்குகள், பத்துக்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது தலைமறைவாக உள்ள நாகராஜின் குடும்பம் சென்னையில் வசிக்கும் நிலையில், இவனது அண்ணன் முருகனும் ஒரு குற்றவாளி. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 25ஆம் தேதி, முருகன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சிறையில் இருந்த போது முருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட, அதற்காக சிகிச்சை எடுத்தபோது சிறை மருத்துவரிடம் முருகன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முருகன் மீது சிறைச்சாலை எஸ்.பி. ஊர்மிளா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.  இதற்குப் பழிவாங்கும் நோக்கில் அண்ணனுக்காக, தம்பி புல்லட் நாகராஜ், எஸ்.பி. ஊர்மிளாவுக்கும், சிறை மருத்துவருக்கும் மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்