ரூ.1 கோடி மதிப்பிலான பழைய ரூ.500, 1000 நோட்டுகள் பறிமுதல் பறிமுதல் : 4 பேர் கைது

மதுரையில் ஒரு கோடி மதிப்பிலான பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-09-03 01:28 GMT
மதுரை கருப்பாயூரணி பகுதியில் வரிச்சியூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த கார் ஒன்றினை சோதனையிட்டதில், அதில் 1 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. 

இது தொடர்பாக மேலூரை சேர்ந்த சரவணன், பரமக்குடியை சேர்ந்த நவீன் சக்தி, ராஜசேகர், தர்மா ஆகிய 4 பேரிடம் சுமார் 9 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

 அதில், சரவணன் என்பவர் மேலூரில் வெளிநாட்டு பணத்தை மாற்றும் நிறுவனம் நடத்தி வருவதும், அங்கிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டுசெல்லப்பட்டதும் தெரியவந்தது. 

இதையடுத்து, 1 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய அதிகாரிகள், காரை பறிமுதல் செய்ததுடன் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்