சேலத்தில் உடற்பயிற்சி செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம் அருகே ரூ.30 லட்சம் மதிப்பில் பூங்கா, உடற்பயிற்சிகூடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

Update: 2018-09-01 06:41 GMT
சேலம் அருகே அனுப்பூர் கிராமத்தில் 30 லட்ச ரூபாய் மதிப்பில் அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்து. இதன் திறப்பு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து அங்கு உடற்பயிற்சி மேற்கொண்டார்.பின்னர் பூங்கவில் உள்ள மைதானத்தில் முதலமைச்சர் இறகு பந்து விளையாடினார். 


"விவசாயிகளுக்கு அரசு துணை நிற்கும்"

தானும் விவசாயி என்பதால் விவசாயம் எவ்வுளவு கடினமானது என்பதை நன்கு அறிவேன் என்றார். விவசாயி செழிப்போடு இருந்தால் தான் நாடு செழிப்படையும் என்று கூறிய அவர், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்கள் வகுத்து அளிக்கப்படும்  என்றும் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்