தொழிலதிபரை ஏமாற்றி ரூ.1 கோடி மோசடி வழக்கு : குற்றவாளிகள் சிக்காத நிலையில் கூட்டாளிகள் கைது

தொழிலதிபரை ஏமாற்றி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேரை கைது செய்துள்ளனர்.

Update: 2018-08-31 10:48 GMT
வங்கியில் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி தருவதாக ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் மோகன சுந்தரத்திடம் 1 கோடி ரூபாய் பெற்று இருவர் மோசடி செய்தனர். இந்த வழக்கில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் குற்றவாளிகளின் கூட்டாளிகள் இருவரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் பணமும் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனினும் முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்