கல்லூரி வளாகத்தில் கஞ்சா உபயோகம் : 4 மாணவர்கள் நீக்கம்

சென்னையில் கல்லூரி வளாகத்தில் கஞ்சா உபயோகித்த மாணவர்கள் நான்கு பேர் மாற்று சான்றிதழ் கொடுத்து உடனடியாக நீக்கப்பட்டனர்.

Update: 2018-08-31 02:43 GMT
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பொருளாதாரம் படித்து வரும் மாணவர்களில் 4 பேர் கல்லூரி வளாகத்தில் உள்ள கழிப்பறையில் கஞ்சா உபயோகிப்பதை பேராசிரியர்கள் பார்த்து கல்லூரி முதல்வருக்கு தெரிவித்துள்ளனர். விசாரணையில் மாணவர்கள் 4 பேரும் கஞ்சா உபயோகித்தது  தெரிய வந்தது. இதையடுத்து, உடனடியாக அவர்களின் பெற்றோர்களை கல்லூரி முதல்வர் வரவழைத்து மாற்று சான்றிதழ்களை கொடுத்து வெளியேற்றினார்.
Tags:    

மேலும் செய்திகள்