3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக 3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.;

Update: 2018-08-27 15:12 GMT
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக 3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். சென்னை -தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தஞ்சை -  அண்ணாதுரை, திருவாரூர் -நிர்மல்ராஜ், நாகை - சுரேஷ்குமார் ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் முறையாக சென்றடைகிறதா என்பது பற்றியும் மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். அப்போது துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி, வேலுமணி, செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்