திருப்பூரில் மனைவியின் கள்ளக்காதலனை கத்தியால் குத்திய கணவன்

திருப்பூரில் மனைவியின் கள்ளக் காதலனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-08-23 03:38 GMT
திருப்பூரில், மனைவியின் கள்ளக் காதலனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த தர்மா என்பவரின் மனைவியும், தனியார் பனியன் நிறுவன ஒப்பந்ததாரர் சித்திக் என்பவரும் நெருங்கிய பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த தர்மா சித்திக்கை மது அருந்த வருமாறு அழைத்து சென்று கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சித்திக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார், தர்மாவை தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்