கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி தினமாக கொண்டாடுங்கள் - கவிஞர் வைரமுத்து

கருணாநிதியின் பிறந்தநாளை, உலகத் தமிழர்கள் அனைவரும் செம்மொழி திருநாளாக கொண்டாட வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-08-22 06:01 GMT
சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில், கவிஞர் வைரமுத்து தலைமையில் மலேசிய நாட்டுத் தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வைரமுத்து, உலக தமிழர்களுக்கு எல்லாம் அடையாளமாக இருந்தவர்  கருணாநிதி என்றார். கருணாநிதியின் வழியில் ஸ்டாலினும் திமுக தலைவராக சிறப்பாக செயல்படுவார் என மக்கள் நம்புவதாக வைரமுத்து கூறினார். கருணாநிதியின் பிறந்தநாளை, உலகத் தமிழர்கள் அனைவரும் செம்மொழி திருநாளாக கொண்டாட வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்