கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை வாபஸ்

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு வாபஸ் பெற்றுள்ளது.

Update: 2018-08-20 15:57 GMT
கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவத​ற்கு தடை விதித்து கல்லூரி கல்வி இயக்குனரகம் கடந்த வாரம் உத்தரவிட்டது. மாணவிகளை படம் பிடிப்பதாக வந்த புகார்களால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கல்லூரி இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக, துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதால், தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், விரிவான ஆலோசனைக்குப் பிறகு விதிமுறைகள் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்