சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு வனப்பகுதி வழியாக செல்வோரிடம் தீவிர சோதனை

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு வனப்பகுதி வழியாக செல்லும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

Update: 2018-08-11 11:08 GMT
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மகாலிங்கம் மலைக்கோவிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக தேனி மாவட்டம் வருஷநாடு அருகே உள்ள உப்புத்துரை கிராமத்தில் இருந்து மலைப்பாதை உள்ளது. வனப்பகுதி வழியாக இங்கு செல்லும் பக்தர்கள் கடுமையான சோதனைக்கு பிறகே கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் வன விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தான விளக்கங்களையும் வனத்துறையினர் பக்தர்களுக்கு கூறினர்
Tags:    

மேலும் செய்திகள்