அவதூறு பேச்சு : பாமக எதிர்ப்பு
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அளவுக்கு அதிகமாக சம்பளம் வாங்கி கொண்டு, ஒழுங்காக வேலை செய்யாமல், போராட்டத்திற்கு மேல் போராட்டம் நடத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட கருத்துக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அளவுக்கு அதிகமாக சம்பளம் வாங்கி கொண்டு, ஒழுங்காக வேலை செய்யாமல், போராட்டத்திற்கு மேல் போராட்டம் நடத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட கருத்துக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கையொன்றில் வலியுறுத்தி உள்ள டாக்டர் ராமதாஸ், நிலுவையில் உள்ள இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.