மாணவர்களின் விபரங்கள் திருட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் சுய விபரங்கள் திருட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.
பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் சுய விபரங்கள் திருட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கூகலூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த உறுதியை தெரிவித்தார்.