19 ஐ.பி.எஸ்.அதிகாரிகள் மாற்றம் : தமிழக அரசு நடவடிக்கை

தமிழகத்தில் 19 ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2018-07-27 03:40 GMT
தமிழகத்தில் 19 ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதன்படி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன்,வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன்,சென்னை மயிலாப்பூர் சரக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்