புதுக்கோட்டையில் களைகட்ட துவங்கிய மொய் விருந்து...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரத்யேகமாக நடத்தப்பட்டு வரும் மொய் விருந்து விழா தற்போது களைகட்ட துவங்கியள்ளது.
திருமணம், காதணி போன்ற விழாக்களில் மொய் செய்யும் முறையானது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு, மாங்காடு, கீரமங்கலம், கொத்தமங்கம், உள்ளிட்ட பகுதியில் மொய் விருந்து விழா என்ற பெயரில் பிரத்யேக விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவானது ஆண்டுதோறும் ஆடி, ஆவணி மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். இதனை 5 முதல் 20 பேர் வரை சேர்ந்து ஒரே இடத்தில் நடத்துகிறார்கள். ஒரு விருந்தில் அதிகபட்சமாக ஒரு டன் வரை ஆட்டுக் கறி சமைத்து அசைவ உணவு பரிமாறப்படுகிறது.