ரஷ்ய பெண் பாலியல் வன்கொடுமை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு

திருவண்ணாமலையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட ரஷ்ய பெண்ணுக்கு மாவட்ட நிர்வாகம் போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது

Update: 2018-07-21 09:58 GMT
திருவண்ணாமலையில் கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட ரஷ்ய நாட்டு இளம்பெண், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் பேசிய ஆட்சியர், வழக்கு விசாரணை முடியும் வரை ரஷ்ய பெண்ணை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் பாதுகாப்பில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திருவண்ணாமலையில் பல்வேறு ஆசிரமங்களில் 290 வெளிநாட்டினர்கள் தங்கியிருப்பதாகவும், அவர்களது பாதுகாப்பு குறித்து ஆசிரம நிர்வாகிகள் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்