இலவச நாட்டு கோழி வழங்கும் திட்டம் : முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

இலவச நாட்டு கோழி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தொடங்கி வைப்பார் என கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-20 04:15 GMT
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், இலவச நாட்டு கோழி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தொடங்கி வைப்பார் என தெரிவித்துள்ளார். கிராமப்புற ஏழை எளிய மக்கள் மற்றும் விதவை பெண்களின் நலனுக்காக சுமார் 77 ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டு கோழிகள் வழங்கப்பட உள்ளது என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்