தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த யானை
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள ராணுவ முகாமுக்குள் சென்ற யானை ஒன்று, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள ராணுவ முகாமுக்குள் சென்ற யானை ஒன்று, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. தொட்டி மீது போடப்பட்டிருந்த பலகையின் மீது யானை சென்றபோது, பலகை உடைந்து, யானை உள்ளே விழுந்துவிட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை ஊழியர்கள், ஜே.சி.பி. இயந்திரம் மூலம் யானையை பத்திரமாக மீட்டனர்.