நகராட்சியை கண்டித்து முன்னாள் அமைச்சர் உள்ளிருப்பு போராட்டம் - தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தவில்லை என புகார்

நாகர்கோவில் நகராட்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Update: 2018-07-17 11:57 GMT
நாகர்கோவிலில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் நிதி ஒதுக்கிய நிலையில், பணிகள்  மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று நகராட்சி அலுவலகத்திற்கு வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடத்திய சமரசப் பேச்சு தோல்வியடைந்த நிலையில், அவர் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்