"ஜெயலலிதா வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் உள்ளது, சசிகலா வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் உள்ளது" - வங்கி அதிகாரி தகவல்

ஆறுமுகசாமி ஆணையத்தில் வங்கி முன்னாள் அதிகாரி மகாலட்சுமி ஆஜரானார்.

Update: 2018-07-10 14:18 GMT
ஆறுமுகசாமி ஆணையத்தில் வங்கி முன்னாள் அதிகாரி மகாலட்சுமி ஆஜரானார். சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தியதில், ஆணையத்திடம்  தெரிவித்த தகவல்களை தான் குறுக்கு விசாரணையிலும் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். இளவரசி மகன் விவேக் கல்வி  கடன் 2012ஆம் ஆண்டே முடிக்கப்பட்டுவிட்டதாகவும், 
ஜெயலலிதா வங்கிக் கணக்கில் 9 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும் , சசிகலா கணக்கில் 3 லட்சம் ரூபாய் இருப்பதாகவும் அவர் விசாரணையில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்