"நீட் தேர்வை அடியோடு எதிர்க்க வேண்டும்" - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

நீட் தேர்வை அடியோடு அகற்றுவதற்கான சட்டப்போரை தமிழக அரசு முழுவீச்சில் நடத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-07-09 13:16 GMT
நீட் தேர்வை அடியோடு அகற்றுவதற்கான சட்டப்போரை தமிழக அரசு முழுவீச்சில் நடத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திற்கு எந்தவகையிலும் தேவையில்லாத நீட் தேர்வை வலுகட்டாயமாக திணித்தன் மூலம் மிகப்பெரிய சமூக அநீதியை மத்திய அரசு இழைத்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், இரு ஆண்டுகளுக்கு மேலாக உச்சநீதின்றத்தில் நிலுவையில் வழக்கை விரைவாக நடத்தி, சாதகமான தீர்ப்பை பெற வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்