மாணவர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்ட நீதிபதி

சத்துணவு தரமாக இல்லை என மாவட்ட முதன்மை நீதிபதி குற்றச்சாட்டு;

Update: 2018-07-07 04:50 GMT
* திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள அனக்காவூர் என்ற இடத்தில் இயங்கி வரும் அரசு மேல் நிலைப்பள்ளியில், மாணவர்களுடன் தரையில் அமர்ந்து, மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, மதிய உணவு சாப்பிட்டார். 

* சத்துணவு தரமாக இல்லை என குற்றஞ்சாட்டிய நீதிபதி, தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். திடீர் ஆய்வு நடத்தி, அதிரடி காட்டிய நீதிபதியை கண்டு, அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், மாணவர்கள், மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்