சுற்றுலா பயணிகளை கவர்ந்த குட்டி யானை - பாகனின் கட்டளைக்கு ஏற்றவாறு நடக்கிறது

ஊட்டி முதுமலை யானைகள் முகாமில் உள்ள தாயை பிரிந்த குட்டியானை ஒன்று, சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

Update: 2018-07-06 03:42 GMT
ஊட்டி முதுமலை யானைகள் முகாமில் உள்ள தாயை பிரிந்த குட்டியானை ஒன்று, சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. ஓசூர் வனப்பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த ஒரு மாதமே ஆன குட்டி யானையை நாய் கடித்ததால், காயங்களுடன் மீட்கப்பட்டது. முதுமலை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த யானை, யானைகள் முகாமில் பொம்மன் என்ற பாகனின் பராமரிப்பில் விடப்பட்டது. அந்த யானை, அவரை விட்டு பிரியாமலும், அவரது கட்டளைக்கு ஏற்ப நடப்பதும் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்