இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி

இந்தியாவுக்கு எதிரான, 3வது ஒருநாள் போட்டியில், 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

Update: 2019-03-09 04:56 GMT
இந்தியாவுக்கு எதிரான, 3வது ஒருநாள் போட்டியில், 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ராஞ்சியில், நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ராணுவ தொப்பியை அணிந்து இந்திய வீரர்கள் களமிறங்கினர். இதில், அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலியா, 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவிந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 48 புள்ளி 2வது ஓவரில் 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
Tags:    

மேலும் செய்திகள்