ஆஸி. ஓபன் டென்னிஸ் தோல்வி எதிரொலி : ஓய்வு பெறுவது குறித்து ஃபெடரர் ஆலோசனை
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரோஜர் ஃபெடரர் ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரோஜர் ஃபெடரர் ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டென்னிஸ் உலகின் முடி சூடா மன்னனாக விளங்கி வரும் ஃபெடரர், இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 37 வயதான ஃபெடரர் நேற்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில் தோல்வியை தழுவினார். இதனையடுத்து விம்பிள்டன் தொடர் அல்லது அதற்கு முன்பு டென்னிஸ் போட்டியிலிருந்து ஃபெடரர் ஓய்வு பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.