பேட்மிண்டன் வீரர்கள் சாய்னா- பாருபள்ளி காஷ்யப் திருமணம்

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சக வீரரும், தமது 10 ஆண்டுகால காதலருமான பாருபள்ளி காஷ்யப்-ஐ திருமணம் செய்து கொண்டார்.

Update: 2018-12-15 02:49 GMT
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சக வீரரும், தமது 10 ஆண்டுகால காதலருமான பாருபள்ளி காஷ்யப்-ஐ திருமணம் செய்து கொண்டார். கடந்த 2005-ம் ஆண்டு கோபிசந்த் பட்டறையில் பயிற்சி பெற்றபோது காதல் வயப்பட்டதாக கூறும் அவர்கள், பயிற்சியாளர் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், குடும்பத்தினர், விளையாட்டு வீரர்கள், தெலங்கானா எம்.எல்.ஏ. ராமா ராவ் உள்ளிட்ட்டோர் கலந்துகொண்டனர். திருமணப் புகைப்படத்தை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சாய்னா நேவால், வதந்தி அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்