சர்வதேச அளவிலான மாரத்தான் போட்டி - ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் பங்கேற்பு

உக்ரைன் நாட்டு தலைநகர் கீவ்வில் சர்வதேச அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2018-10-08 11:01 GMT
உக்ரைன் நாட்டு தலைநகர் கீவ்வில் சர்வதேச அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்கா, உக்ரைன், போலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.  உக்ரைன் நாட்டின் கிழக்கில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிராக உக்ரேனிய வீரர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளையும் அழைத்து கொண்டு இந்த மாரத்தானில் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்