இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் : தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது.

Update: 2018-09-11 13:10 GMT
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி கடைசி இன்னிங்சில் விளையாடி வருகிறது. பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் டெஸ்ட் அரங்கில் 5வது சதத்தை விளாசினார். ரஹானே 37 ரன்களிலும், விஹாரி டக் அவுட்டாகியும்  பெவிலியன் திரும்ப இந்திய அணி உணவு இடைவேளைக்கு முன்பு வரை 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்