டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி : 5 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில், 5 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது.

Update: 2018-07-30 01:14 GMT
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில், 5 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது. நெல்லையில் நடந்த 19 வது லீக் போட்டியில்,  டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய மதுரை அணி 18.2 ஓவரிலேயே 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்யாசத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது.
Tags:    

மேலும் செய்திகள்