எம்.எல்.ஏ வீட்டிற்கு சென்றார் முதலமைச்சர் - எம்.எல்.ஏ உடல்நலம் குறித்து விசாரிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ முருகையா பாண்டியன் வீட்டிற்கு சென்றனர்.

Update: 2021-01-05 11:30 GMT
தெற்கு பாப்பான்குளம் கிராமத்தில் உள்ள எம்.எல்.ஏ இல்லத்தில் சுமார் 15 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் முருகையா பாண்டியனின் உடல் நலம், அவருக்கு ஏற்பட்டுள்ள மூட்டுவலி மற்றும்  குடும்ப நலன் குறித்து முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் கேட்டறிந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்