கொரோனா குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை - பிரதமர் மோடி

கொரோனா குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-03-12 18:17 GMT
கொரோனா குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பிரதமர் மோடி  நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் காலங்களில் மத்திய அமைச்சர்களின்  வெளிநாட்டு பயணங்கள் தவிர்க்கப்படும் என்றும்,  பொதுமக்களும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். கொரோனா குறித்த பயத்திற்கு நோ சொல்லுங்கள், முன்னெச்சரிக்கைக்கு எஸ் சொல்லுங்கள் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்