"பாஜகவினர் திருவள்ளுவரை காவிமயமாக்கி வருகின்றனர்" - மக்களவையில் தி.மு.க. எம்.பி, டி.ஆர்.பாலு முறையீடு

பாரதிய ஜனதா கட்சியினர் சென்னையில் திருவள்ளுவரை காவி மயமாக்கி வருவதாக மக்களவை உறுப்பினர் டி. ஆர். பாலு கூறினார்.

Update: 2019-11-20 09:52 GMT
பாரதிய ஜனதா கட்சியினர் சென்னையில் திருவள்ளுவரை காவி மயமாக்கி வருவதாக மக்களவை உறுப்பினர் டி. ஆர். பாலு கூறினார். மக்களவையில் பேசிய அவர்,  செம்மொழி நிறுவனத்திற்காக மத்திய அரசு 143 நிரந்தர பணியிடங்களை அமைத்துள்ளது என்றும், ஆனால் அவற்றில் ஒன்று கூட இதுவரை நிரப்பப்படவில்லை என்றும் முறையிட்டார். பிரதமர் எங்கு சென்றாலும், தொடர்ந்து தமிழை பெருமைப்படுத்தும் நிலையில், பாஜகவினர் நடந்து கொள்வது  வேறொன்றாக இருப்பதாகவும் டி.ஆர். பாலு குற்றம் சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்