"எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தான் இனி வெற்றி பெறும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
துபாய்க்கு இணையாக சென்னையை மாற்ற இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், அ.தி.மு.க. சார்பில் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், தம்முடைய வெளிநாட்டு பயணத்தை கேள்வி கேட்கும் ஸ்டாலின், அடிக்கடி வெளிநாடு செல்வது ஏன் என மக்களுக்கு தெளிவுப்படுத்த முடியுமா? என்றார்.
ஸ்டாலின் பாராட்டு தேவையில்லை என்றும், இனி எத்தனை ஸ்டாலின்கள் வந்தாலும் எதிர்வரும் தேர்தல்களில் அ.தி.மு.க.வே வெற்றி பெறும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.