நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை : வரவேற்பு கொடுத்த பிரதமர்
ஜலசக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.;
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ராம்நாத் கோவிந்த் குதிரைப்படைகள் சூழ வந்தார். அங்கு அவரை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் வரவேற்றனர்.