5-வது முறையாக முதலமைச்சரானார் நவீன் பட்நாயக்

பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் 5 வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

Update: 2019-05-29 07:47 GMT
பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக்  5 வது முறையாக முதலமைச்சராக  பொறுப்பேற்றுள்ளார். ஒடிசா சட்டமன்ற தேர்தலில் 146 தொகுதிகளில், 112 இடங்களைக் பிஜூ ஜனதா தளம் கைப்பற்றியது. அதனையடுத்து அந்த கட்சியின் தலைவர் நவீந் பட்நாயக் , ஐந்தாவது முறையாக ஒடிசா முதலமைச்சராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில்,  அம்மாநில ஆளுநர் கணேஷி லால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

ஐந்தாவது முறையாக அமையும் அமைச்சரவையில் பல புதிய முகங்களுக்கு பதவி அளிக்கலாம் என நவீன்பட்நாயக் யோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோல கடந்த ஆட்சி காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட சில அமைச்சர்களை இந்த முறையும் அதே துறையில் நீட்டிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஒடிசாவில் மீண்டும் பதவி ஏற்பதற்காக, நவீன் பட்நாயக்கிற்கு  வாழ்த்துகளை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஒடிசா வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்