வேட்பாளர் செய்யாத பணிகளை நான் வந்து செய்து கொடுப்பேன் - கமல்

மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் செய்ய தவறும் பணிகளை தானே நேரில் வந்து செய்து தருவேன் என கமல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-05 21:55 GMT
மக்கள் நீதி மய்ய  கட்சி வேட்பாளர் செய்ய  தவறும் பணிகளை தானே நேரில் வந்து செய்து தருவேன் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து அவனியாபுரம் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவே அரசியலில் தான் இறங்கியதாக  கூறினார். தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்கிற வருத்தம் தனக்கு இருப்பதாகவும் கூறிய கமல், மக்கள் பணிகளை செய்யத் தவறினால் வேட்பாளரின்  ராஜினாமா கடிதத்தை வாங்கி மக்களிடம் அளிப்பேன் என்றும் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்