22 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் - உதயநிதி ஸ்டாலின்
22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் நீலமேகம், மற்றும் தஞ்சாவூர் மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனிமாணிக்கம் ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தஞ்சை பர்மா காலனி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என கூறினார்.