"அதிமுகவை ஊழல் வழக்கில் சிக்க வைக்க முடியாது" - முதலமைச்சர் பழனிசாமி

"பொய்க்கு நோபல் பரிசு என்றால் ஸ்டாலினுக்கு தான் முதல் பரிசு" - முதலமைச்சர் பழனிசாமி

Update: 2019-03-31 04:18 GMT
ஸ்டாலின் எங்கு பிரசாரம் சென்றாலும் பொய் மூட்டைகள் அவிழ்த்து விடுகிறார் என்றும், அதிமுகவை எந்த ஊழல் வைக்கிலும் சிக்க முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகையில் அதிமுக வேட்பாளர் தாழை சரவணனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், திமுக முன்னாள் அமைச்சர்கள் செய்த தவறுகள் பற்றி தங்களுக்கு தெரியும் என்றும், பொய் குற்றச்சாட்டுகளை தொடர்ந்தால், இருக்கும் இடம் வேறு இடமாக இருக்கும் என்றும் முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்