"ஆளும் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது " - தினகரன் பிரசாரம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பழனியப்பன், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2019-03-31 01:11 GMT
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்  பழனியப்பன், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோரை  ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் நம்மால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி தொண்டர்களுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்து ஆட்சியை தொடர்கிறது என்றார். ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டக்கூடாது என்று கூறியவர்களுடனும்,  சட்டசபையில் ஜெயலலிதா படம் வைக்கக் கூடாது என்று கூறியவர்களுடனும் கூட்டணி வைத்துள்ளதாக தினகரன் குற்றம்சாட்டினார். இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்