அன்புமணி ராமதாசை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்

திமுக ஆட்சியில் இருந்தது போல இல்லாமல், தற்போது மின்வெட்டு இல்லாத, கட்டப்பஞ்சாயத்து இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-22 20:34 GMT
மக்களவை தேர்தலில், தருமபுரி தொகுதியில் போட்டியிடும், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாசை ஆதரித்து, முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்தார். தருமபுரி மாவட்டம், தொப்பூர், பென்னாகரம், இண்டூர் உள்ளிட்ட இடங்களில் அன்புமணி ராமதாசுக்கு, ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார். முன்னதாக தொப்பூரில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ஸ்டாலினிடம் அதிகாரம் இருந்த போது, மக்களின் தேவைகளை அவர் பூர்த்தி செய்யவில்லை என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்