பதிலடி தாக்குதல் வெற்றியை சொல்வது பிரதமரின் கடமை - பொன் ராதாகிருஷ்ணன்
பதிலடி தாக்குதல் வெற்றியை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் கடமை பிரதமர் மோடிக்கு உள்ளதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி தாக்குதல் வெற்றியை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் கடமை பிரதமர் மோடிக்கு உள்ளதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதில் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய அவசியமில்லை என்றார்.